2012-02-01 15:03:54

ஹாங்காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், அருள்பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன


பிப்.01,2012. ஹாங்காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், அருள்பணியில் ஈடுபட முன்வருவோரின் எண்ணிக்கையும் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன என்று அண்மையில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.
ஹாங்காங் கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளி விவரங்களின் படி, 1954ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றும் தெரிகிறது.
2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங் பகுதியில், 350,000 பேர் கத்தோலிக்கர்கள் என்றும், பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து அங்கு பணிகள் செய்வதற்கு வந்திருப்போரையும் சேர்த்தால், இவ்வெண்ணிக்கை 5,30,000 ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அருள்பணியில் இணையும் இளையோரின் எண்ணிக்கை கூடினாலும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ற அளவு திருப்பணியாளர்கள் இல்லை என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.