2012-01-31 15:33:34

முன்னாள் சர்வதிகாரி மீது விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து குவாத்தமாலா திருஅவை மகிழ்ச்சி


சன.31,2012. குற்றமிழைத்தவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி தொடர்ந்து தப்பித்து வந்த குவாத்தமாலா நாட்டில் தற்போது, முன்னாள் சர்வாதிகாரி Efrain Rios Montt, கைது செய்யப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது நல்லதொரு முன்மாதிரிகை என தலத்திருஅவை தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தோடு தொடர்புடையவர்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் வலுப்பெற்று வந்த ஒரு நாட்டில் தற்போது முன்னாள் சர்வதிகாரி ஒருவர் தண்டனை பெற உள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார் குவாத்தமாலா உயர்மறைமாவட்ட மனித உரிமை அலுவலக இயக்குனர் Estuardo Paredes.
பூர்வீகக் குடிமக்களுக்கு எதிராக இராணுவ ஆட்சித்தலைவர் Rios Montt தலைமையில் இடம்பெற்ற, தாக்குதல்களில் 1800 பூர்வீகக்குடியினர் கொல்லப்பட்டது குறித்து கடந்த வாரம் இடம் பெற்ற விசாரணைகளில் Rios Montt மீது குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1960 முதல் 96 வரை குவாத்தமாலாவில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.