2012-01-31 15:43:22

கவிதைக் கனவுகள்... பாலை நிலத்தில் பஞ்சணை


படிப்படியாக இடியும் பாழும் மனது
துடிதுடித்துக் கதறும் துன்பம் கண்டு
விடிய விடிய கரையும் வீணே அழுது

அடுக்கடுக்காய் வரும் துன்பம் கண்டு
மடமடவென மடைதிறக்கும் கண்கள்
மளமளவென எடை இழக்கும் நெஞ்சம்
ஆனால்...
கொட்டிடத் துடிக்கும் கண்ணீரை
ஒற்றிடக் கரங்கள் நீளாதபோது,
பொங்கிவரும் கண்ணீரும்
தங்கிவிடும் நெஞ்சுக்குள்ளே...

உலர்ந்து போகும் விம்மல்கள்
உறைந்து போகும் உணர்வுகள்
மரத்துப் போகும் நினைவுகள்

மரத்துப்போன மனதினை
மலர்களிட்ட அணைகளும்
மகிழ்விக்க வழியில்லை...

பாலை நிலத்தில் பஞ்சணை விரிப்பது
பைத்தியக்காரத்தனம் இல்லையா?








All the contents on this site are copyrighted ©.