2012-01-30 14:44:30

இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி


சன.30,2012. இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவர் ஆஸ்கார் லூயிஜி ஸ்கால்ஃபரோ இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, இத்தாலி நாட்டு மக்களுக்கும் முன்னாள் அரசுத்தலைவரின் குடும்பத்திற்கும் இரங்கற்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி நாடு அடைந்துள்ள இவ்விழப்பில் தானும் ஆழமான விதத்தில் பங்கு கொள்வதாக தன் செய்தியில் உரைக்கும் திருத்தந்தை, இந்த முன்னாள் அரசுத்தலைவர் தன் கடமைகளைச் சிறப்புடன் ஆற்றியுள்ளதுடன் அறநெறி மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் சிறப்புப் பங்காற்றியதை தான் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1992 முதல் 99 வரை இத்தாலியின் அரசுத்தலைவராக பதவி வகித்த ஸ்கால்ஃபரோ, இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் தனது 93ம் வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.