ஆசியா பீபியின் விடுதலை வேண்டி 560,000 கையெழுத்துக்கள்
சன.30,2012. பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள
கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபியின் விடுதலையை வேண்டி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர்
விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இறைநிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீக்கக் கோரி, லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள
ஆசியா பீபியின் விடுதலைக்கென இணையதளம் வழி 10 இலட்சம் மக்களின் கையெழுத்தைப் பெறும் நோக்கத்துடன்
துவக்கப்பட்ட இப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து
ஐந்து இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இக்கையெழுத்துக்களுடன்
கூடிய விண்ணப்பங்கள் அவ்வப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரகத்தில்
சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.