கவிதைக் கனவுகள்... சாத்திரங்கள் போதும்... சரித்திரங்கள் வேண்டும்
இளவல்களே - நம் இதயத்தின் கனவுகள் துணிவுகள் அனைத்தையும் இன்று அரங்கேற்றுவோம்
- வரும் நாளில் நாடெங்கும் நீதி நிஜமாகத் துணிந்து செயலாற்றுவோம்
பழமையில்
ஊறிய கதைகளைச் சொல்லி இதம் கண்டது போதும் வளமையில் உலகை வளர்த்திடும் புதுமை உதயம்
இன்று தோன்றும் உதவிட நீண்டிடும் இளையக் கரங்கள் ஓராயிரம் இணைப்போம் உறவினில் நீதியில்
உண்மையில் உறுதியில் உலகை நிலைக்க வைப்போம்
வேற்றுமை வளர்த்திட வேதங்கள் ஓதிய சாத்திரங்கள்
போதும் சமத்துவப் பாதையில் சகலரும் நடந்திடும் சரித்திரங்கள் வேண்டும் உழைத்திட
முன்வரும் இளையத் தோள்கள் ஓராயிரம் படைப்போம் உரைத்திடும் மொழிகளில் உண்மையை நேர்மையை உலகமெங்கும்
விதைப்போம்