2012-01-27 15:40:37

மனித சமுதாயத்தின் கொடூரங்களில் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் – ஐ.நா.பொதுச் செயலர் கவலை


சன.27,2012. இவ்வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட, இவ்வுலக யூதஇனப் படுகொலை நினைவு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மனித சமுதாயத்தின் கொடூரங்களில் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.
நாத்சி கொள்கையாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் 15 இலட்சம் யூதச் சிறார் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள பான் கி மூன், நாத்சிக் கொடுமைகளுக்குப் பல்லாயிரக்கணக்கான யூதரல்லாத சிறாரும் பலியாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு யூதஇனப் படுகொலை நினைவு தினம், சிறாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றுரைத்த அவர், போரினால் பெற்றோரை இழந்துள்ள மற்றும் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள சிறார் பற்றிய கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.