2012-01-27 15:41:37

திருத்தந்தையின் மெக்சிகோத் திருப்பயணத்தின் போது குற்றங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டுப் பேராயர் அழைப்பு


சன.27,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மெக்சிகோவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் போது, குற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படுமாறு அந்நாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் Jose Guadalupe Martin Rabago.
மெக்சிகோ போதைப்பொருள் வியாபாரிகளால் தூண்டப்படும் வன்முறைச்சூழல் நாட்டில் விரைவாகப் பரவி வருகிறது என்று அண்மையில் நிருபர் கூட்டத்தில் குறிப்பிட்ட பேராயர் Martin Rabago, மெக்சிகோ நாடு, அமைதி மற்றும் அருளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளுமாறும் குற்றக் கும்பல்களைக் கேட்டுள்ளார்.
எனவே திருத்தந்தை மெக்சிகோவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் மகிழ்ச்சியான தருணத்தில், வேதனையையும் மரணத்தையும் கொண்டு வருவதைத் தவிர்த்து நடக்குமாறு, அனைத்து மெக்சிகோ மக்கள் சார்பாக அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார் பேராயர் Martin Rabago.
குற்றக் கும்பல்களும் மனிதர்களே என்று சொல்லி, அவர்கள் பிறரின் வாழ்வை மதித்து நடக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
திருத்தந்தையின் மெக்சிகோவுக்கானத் திருப்பயணம் வருகிற மார்ச் 23 முதல் 26 வரை நடைபெறும்.







All the contents on this site are copyrighted ©.