2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டு பிரிட்டன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்
அறிக்கை
சன.27,2012. பிரிட்டனில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை
முன்னிட்டு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகள், இங்கிலாந்து அரசியின் வைர விழா, பாரா ஒலிம்பிக் விளையாட்டுகள்
என, 2012ம் ஆண்டு பிரிட்டனுக்குக் கொண்டாட்டங்களின் ஆண்டாக இருக்கின்றது என்று அவ்வறிக்கை
கூறுகின்றது. மே முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் இடம் பெறும் இக்கொண்டாட்டங்களுக்குக்
கிறிஸ்தவ சபைகளும் பல்வேறு மக்களுக்கு உதவும் வழிகள் குறித்தத் தயாரிப்புக்களைத் தொடங்கி
விட்டன என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது. வெஸ்ட்மின்ஸ்டர் கத்தோலிக்கப் பேராயர்
வின்சென்ட் நிக்கோல்ஸ், கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட அனைத்துக்
கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.