2012-01-26 15:55:49

போஸ்னியாவில் பகையுணர்வுடன் நடத்தப்படுவதாக அருட்சகோதரிகள் கவலை


சன.26,2012. Bosnia-Herzegovina நாட்டில் கத்தோலிக்க அருட்சகோதரிகள் மிகவும் பகையுணர்வுடன் நடத்தப்படுவதாக அங்குப் பணிபுரியும் சபை ஒன்றின் மாநிலத்தலைவி தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
போஸ்னியாவைச் சேர்ந்த தாங்களே மதத்தின் அடிப்படையில் வேற்று நாட்டவர்கள் போல் நடத்தப்படுவதாக உரைத்த கிறிஸ்துவின் பிரான்சிஸ்கன் கன்னியர் சபை மாநிலத் தலைவி அருட்சகோதரி இவங்கா மிஹாலியேவிச், சில கடைக்காரர்கள் தங்களுக்கு ரொட்டியை விற்கவும் மறுக்கிறார்கள் என்றார்.
போஸ்னிய இசுலாமியர்களைவிட தங்களை மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து குடியேறிய இசுலாமியர்களே அதிக அளவில் பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அநாகரீக வார்த்தைகளால் தங்களைப் பழிப்பதாகவும் மேலும் தெரிவித்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.