பாகிஸ்தானில் காரித்தாஸ் பிறரன்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சன.26,2012. பாகிஸ்தானில் வெளிநாட்டு பிறரன்புப் பணியாளர்கள் பாகிஸ்தான் இசுலாம் தீவிரவாதிகளால்
கடத்திச் செல்லப்படுவதன் காரணமாக அந்நாட்டிற்கான வெள்ள நிவாரணப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக
அறிவித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்
வெளிநாட்டுப் பணியாளர்களை கடத்தி, பிணையத்தொகை கேட்கவும் அரசுகளிடமிருந்து சில சலுகைகளை
மிரட்டிப் பெறவும் இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் முயன்று வருவதால் பணியிடங்களுக்கு வெளிநாட்டவரை
அனுப்புவது சிரமமாக உள்ளது என்ற பாகிஸ்தான் காரித்தாஸ் அதிகாரி Amjad Gulzar, இம்மாதத்தில்
இதுவரை நான்குபேர் உட்பட கடந்த ஆறு மாதங்களில் ஏழு வெளிநாட்டுப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார். 2010ம் ஆண்டின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து
உதவிகளை ஆற்றி வரும் கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, இதுவரை 1150 குடும்பங்களுக்குத்
தேவையான அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது. இதில் பெரும்பான்மையினோர் இசுலாமியர்.