2012-01-26 16:01:20

கவிதைக் கனவுகள் … பேரிகை


துன்பம் பிறர்க்கு, நல் இந்பம் தமக் கெனும்
துட்ட மனோபாவம்
அன்பினை மாய்க்கும், அறங்குலைக்கும், புவி
ஆக்கந் தனைக் கெடுக்கும்
வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்
வறுமை யெலாம் சேர்க்கும்
இன்பம் எல்லார்க்கும் என்ரே சொல்லிப் பேரிகை
எங்கும் முழக்கிடுவாய்

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப் பான்மை
தொல்புவி மேல்விழும் பேரிடியாம், அது
தூய்மைதனைப் போக்கும்
சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
சூழத் தகாது கண்டாய்
செல்வங்கள் யார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழக்கிடுவாய். – புரட்சிக்கவி பாரதி தாசன்








All the contents on this site are copyrighted ©.