சன.25,2012. ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டப்படி வெளிப்படையாக விசாரணை
நடந்திருந்தால்கூட, ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். ஈராக்கில்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும்
குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள்
உட்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,200 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.