இந்தியாவில் 13 சிறுமிகளுக்கு ஒருவர் வீதம் ஆறு வயதை எட்டுவதில்லை
சன.25,2012. இந்தியாவில் 13 சிறுமிகளுக்கு ஒருவர் வீதம், ஆறு வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை
என்று, இந்தியத் தேசிய சிறுமிகள் தினமான இச்செவ்வாயன்று கூறினார் மருத்துவர் Pascoal
Carvalho. இந்தியாவில் குடும்பங்களிலும் வெளியிலும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதும்
அக்குழந்தைகளுக்கு எதிரான எல்லாவிதமானப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்றும் மருத்துவர்
Carvalho கேட்டுக் கொண்டார். கருவிலே பாலினம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவது
மற்றும் பெண்சிசுக்கொலைகளினின்று சிறுமிகள் காப்பாற்றப்படுமாறும், திருப்பீட வாழ்வுக்
கழகத்தின் உறுப்பினராகிய மருத்துவர் Carvalho வலியுறுத்தினார். சனவரி 24ம் தேதி,
தேசிய சிறுமிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என்று 2009ம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்தது.
1966ம் ஆண்டு சனவரி 24ம் தேதி, திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை, அன்னைமரியா பிறந்த
விழாவான செப்டம்பர் 8ம் தேதியன்று, தேசிய சிறுமிகள் தினத்தைச் சிறப்பிக்கின்றது. அக்டோபர்
11ம் தேதி உலகப் சிறுமிகள் தினம்.