கொல்கத்தாவின் St.Xavier கல்லூரியை தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாற்ற முதல்வர் விருப்பம்
சன.24,2012. கொல்கத்தாவில் இயேசு சபையினரால் நடத்தப்படும் St Xavier கல்லூரி, தன்னாட்சிப்
பல்கலைக்கழகமாக மாற விரும்பினால் அதற்கு அரசு தன்னாலான உதவியைச் செய்யத் தயாராக இருப்பதாக
அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி. இம்மாநிலத்தின் முதல் தன்னாட்சிப்
பலகலைக்கழகமாக செயின்ட் சேவியர் கல்லூரி மாற வேண்டும் எனத் தான் ஆவல் கொள்வதாகவும் கூறிய
அவர், கலகத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் இதற்கான பரிசீலனைகளைத் துவக்க
வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த இயேசு சபை கல்லூரியை மேலும் விரிவுபடுத்த
நிலம் ஒதுக்குவது குறித்துத் தான் ஆலோசித்து வருவதாகவும் கூறினார் முதல்வர் பேனர்ஜி. பெல்ஜியம்
இயேசு சபையினரால் 151 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் துவக்கப்பட்ட இக்கல்லூரி, இந்தியாவில்
தர வரிசையில் முதல் 10 கல்லூரிகளுள் ஒன்றாக உள்ளது.