கிறிஸ்தவ சபைகளிடையே நட்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது
சன.24,2012. கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கு, சந்தேகம், சோம்பல், பொறுமையின்மை என்ற
மூன்று எதிரிகளையும் வெற்றிகாண வேண்டிய அவசியம் உள்ளது என்றார் பிரிட்டன் கர்தினால் Cormac
Murphy-O'Connor. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு எதிராகச் செயல்படும் இம்மூன்று எதிரிகளையும்
வெற்றி கொள்வதோடு, இவ்வொன்றிப்பிற்காகத் தொடர்ந்து செபிப்பதும் கிறிஸ்தவர்களின் கடமை
என்றார் கர்தினால் O'Connor. கிறிஸ்தவ ஒன்றிப்புக் கனவு உயிரோட்டமுடையதாக இருக்க
வேண்டுமெனில் செபமும், மக்களிடையே ஒன்றிப்பு முயற்சிகளும் இன்றியமையாதவை என்ற அவர், அண்மைக்
காலங்களில் கிறிஸ்தவ சபைகளிடையே நட்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி தரும் ஒன்றாக
உள்ளது என்றார். உலகாயுதப் போக்குகளால் கவரப்பட்டுள்ள இவ்வுலகிற்கு கிறிஸ்தவர்களின்
ஒன்றிணைந்த சாட்சியத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார் கர்தினால் O'Connor. கருவில்
உருவானது முதல் இயற்கை மரணம் வரை வாழ்வைப் பாதுகாத்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், குடும்பங்களின்
முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுதல் போன்றவைகள் குறித்தும் தன் கருத்துக்களை வழங்கி,
அவைகளில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த பணியையும் வலியுறுத்தினார் இங்கிலாந்து
கர்தினால் O'Connor.