2012-01-23 15:56:29

கிறிஸ்தவப் பள்ளிகளை அரசு கைப்பற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் ஷாரியா நீதிமன்றம் விண்ணப்பம்


சன 23, 2012. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அவைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநிலத்தின் இசுலாம் மத ஷாரியா நீதிமன்றம்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்வாய்ந்த கல்வியாளர்கள் கிறிஸ்தவப் பள்ளிகளின் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், அந்த ஷாரியா நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. கிறிஸ்தவப் பள்ளிகளில் இசுலாமியப் படிப்புகளுக்கென ஒரு வகுப்பு துவக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள இந்த மத நீதி மன்றம், சையது முகமது இக்பால் எழுதிய காலை செபம் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளி துவங்குமுன் பாடப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.
மூன்று கிறிஸ்தவக் குருக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அண்மையில் இந்த ஷாரியா நீதிமன்றம் அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.