கவிதைக் கனவுகள்..........சிறு மாற்றம் உலகின் மாற்றம்
கருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும்
பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய்
நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான். ஒன்றை இழக்கையிலே ஓராயிரம்
நாம் பெறுவோம் இழந்ததையே நினைத்திருந்தால் புதியதையே பெற மறப்போம் எதையும் இழக்கும்
பொழுதெல்லாம் இதை நினைக்கும் மனமிருந்தால் இருக்கையிலே போற்றினாலும் இழக்கையிலே
மனம் வருந்தோம் இனிப் பெறுவதென்னவென்றே இன்முகத்துடன் எதிர்பார்ப்போம். ( நன்றி:
என். கணேசன்)