2012-01-23 15:55:27

கர்நாடகாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரான தாக்குதல்களை கண்டிக்கும் விதமாக ஊர்வலம்


சன 23, 2012. கர்நாடகாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரான தாக்குதல்களைக் கண்டிக்கும் விதமாக இவ்வாரம் வெள்ளியன்று பெரிய அளவிலான ஊர்வலம் ஒன்றிற்கு, மங்களூர் மற்றும் உடுப்பி மாவட்டங்களின் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளும் மதக்குழுக்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த ஊர்வலம் குறித்து தங்கள் மசூதிகள் வழி ஆதரவு திரட்ட உள்ளதாக இசுலாமிய குருக்கள் அறிவித்துள்ள வேளையில், அனைத்து கிறிஸ்தவப் பங்குத்தளங்களும் இந்த ஊர்வலம் குறித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஊர்வலத்திற்கான அரசு அனுமதியையும் பெற்றுள்ள சிறுபான்மைச் சமுதாய மதக் குழுக்கள், இவ்வாரம் புதனன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளன.
மனித உரிமைகளையும் அரசியலமைப்பின் வழி பெற்றுள்ள உரிமைகளையும் மீறும் மத அடிப்படைவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக செபிக்கும் நாளாகவும் இம்மதம் 27ந்தேதியின் நடவடிக்கைகள் இருக்கும் என்று இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோர் கூறியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.