1300ககும் மேற்பட்ட இளம் நேபாளக் குடியேற்றதாரர்கள் ஏழ்மைக்கும் சுரண்டலுக்கும் பலியாகியுள்ளனர்
சன 23, 2012. வேலை தேடி வெளிநாடுகளில் குடியேறும் நேபாள இளையோரில் 1,357 பேர் 2009ம்
ஆண்டிலிருந்து ஏழ்மையாலும் சுரண்டல்களாலும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அறிக்கை ஒன்று
தெரிவிக்கிறது. தற்கொலைகள், வன்முறை, கொலை, மனச்சோர்வு மற்றும் ஆரோக்கியமற்ற நிலைகளால்
இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை, பெரும்பானமை
மரணங்கள் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் நேபாள இளையோரிடையே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கிறது