2012-01-21 15:31:22

ஆசியாவில் ஏழ்மை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வலியுறுத்தல்


சன.21,2012. உலகில் ஏறக்குறைய பாதிப்பேருக்கு நவீன மின்சக்தி வசதிகள் குறைவுபடுகின்றன எனவும், உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது 140 கோடிப் பேருக்கு மின்சார வசதி இல்லை எனவும் ஐ.நா.கூறியது.
உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர், அதாவது 270 கோடிப் பேர் சமைப்பதற்கும் வீட்டை வெப்பமாக்குவதற்கும் மரத்தையும் கரியையும் விலங்குகளின் கழிவையும் சார்ந்துள்ளனர் எனவும் ஐ.நா.அறிவித்தது.
இப்பயன்பாட்டினால் காற்று அசுத்தமடைவதால், 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 15 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்க நேரிடும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.