விசுவாச ஆண்டைக் கொண்டாடுவதற்கு உதவும் திருப்பீடத்தின் பரிந்துரைகள்
சன.19,2012. அன்பர்களே, வருகிற அக்டோபர் 11ம் தேதி கத்தோலிக்கத் திருஅவையில் விசுவாச
ஆண்டு ஆரம்பமாகின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள இவ்விசுவாச ஆண்டு, 2013ம்
ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும். இவ்விசுவாச ஆண்டை, உலகளாவியத் திருஅவை, ஆயர்
பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குகள், இயக்கங்கள், பக்த சபைகள் என எல்லா மட்டங்களிலும்
கொண்டாடுவதற்கு உதவியாகத் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் மேய்ப்புப்பணி சார்ந்த
பரிந்துரைகளை இம்மாதம் 7ம் தேதி வெளியிட்டது. இப்பரிந்துரைகளின் சுருக்கத்தை ஏற்கனவே
வத்திக்கான் வானொலியின் செய்தியில் கேட்டிருக்கிறீர்கள். இன்று அவற்றில்ச் சற்று விரிவாகத்
தர வந்திருக்கிறார் அருள்தந்தை உவரி அந்தோணி, ம.ஊ.ச.