2012-01-19 13:34:37

கவிதைக் கனவுகள்… ஒன்றே குலம் ஒருவனே தேவன்


ஒன்றே நம் குலமென்று ஒற்றுமையாய் வாழ்வோம்
ஒருவனே தேவனென்று உறவோடு வாழ்வோம்
நீங்காத இன்பத்தில் நீடூழி வாழ்வோம்
நினைவு, மனது, சொல், செயல் தீதின்றி வாழ்வோம்
பரந்த வானில் உரிமைச் சிறகு விரித்து பறப்போம்
பயந்து வாழும் அடிமைகளின் விலங்கை உடைப்போம்
மனிதத் துயரம் மதித்திடாத மதங்களை
துணிவுடனே குழிகளிலே புதைத்திடுவோம்
சமுதாய வளர்ச்சிக்குத் துணையாகும் மறைகளைச்
சந்தனமாய்ப் பூசுவோம், சளைக்காது போற்றுவோம்
பிரிவினைப் பேய்களைப் பிறப்பிலே வெட்டுவோம்
இணைத்திடும் பாலங்கள் எங்குமே கட்டுவோம்
தாய்திரு நாட்டை பெரிதென உயர்த்துவோம்
மெய்பொருளை நேரிய மனதில் தேடுவோம்








All the contents on this site are copyrighted ©.