குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் பணி ஒய்வும், பேராயர் ஜான் மூலச்சிறா பொறுப்பு
ஏற்பும்
சன.18,2012. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் வயது காரணமாக
பணி ஒய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த உயர்மறைமாவட்டத்தின் பொறுப்பை வாரிசுரிமைப் பேராயர்
ஜான் மூலச்சிறா இப்புதன் முதல் ஏற்றுக் கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பேராயர்
மூலச்சிறா, 1951ம் ஆண்டு கேரளாவின் புதுசேரிகடவு எனுமிடத்தில் பிறந்து, 1978ம் ஆண்டு
தேஜ்பூர் மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2007ம் ஆண்டு Diphu மறைமாவட்ட
ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 2011ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் குவஹாத்தியின் வாரிசுரிமைப்
பேராயராகச் செயலாற்றி வந்தார். இப்புதன் முதல் பணி ஓய்வுபெறும் பேராயர் மேனம்பரம்பில்,
கேரளாவின் பாலையில் 1936ம் ஆண்டு பிறந்து, 1965ம் ஆண்டு சலேசிய சபையில் குருவாகவும்,
1981ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1981ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் Dibrugarh
ஆயராகவும், 1992ம் ஆண்டு முதல் பணி ஒய்வு பெறும்வரை குவஹாத்தி பெருமறைமாவட்டத்திலும்
பணியாற்றியுள்ளார்.