திருப்பீடத்திற்கான தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து அரசு எடுத்த முடிவுக்கு அந்நாட்டு
மக்கள் எதிர்ப்பு
சன.17,2012. திருப்பீடத்திற்கான தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து அரசு எடுத்த முடிவு
அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டதாக அண்மையில் Irish Examiner என்ற
நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. வத்திக்கான் நாட்டிற்கான தூதரகத்தை மூட உள்ளதாக
அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் Eamon Gilmore அறிவித்தவுடன் மக்களிடமிருந்து வெளியுறவு
அமைச்சகத்துக்கு வந்த செய்திகளுள் 93 விழுக்காடு, அந்த முடிவை விமர்சித்து எதிர்ப்பதாகவே
இருந்தது என்கிறது இச்செய்தி. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து
இத்தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளது Irish Examiner நாளிதழ்.