சீனாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள் மற்றும் குருக்கள் விடுவிக்கப்பட மீண்டும்
அழைப்பு
சன.17,2012. சீனாவில் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள் மற்றும் குருக்கள்
அரசால் விடுவிக்கப்படுவது, சீனா குறித்த எண்ணம் சர்வதேச அளவில் மேம்பட உதவும் என உரைத்தார்
நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பேராயத்தின் செயலர் பேராயர் Savio Hon Tai-fai. அரசுக்
காவலில் காணாமற் போனவர்கள் மற்றும் கட்டாய வேலை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள கத்தோலிக்கத்
தலைவர்கள் குறித்து சீன அரசு மௌனம் காத்தாலும் கத்தோலிக்கர்கள் ஒரு நாளும் அவர்களை மறந்து
விட முடியாது என்றார் பேராயர். மறைசாட்சிகளான இவர்கள், நம் நற்செய்தி அறிவித்தலை பலன்
தரும் ஒன்றாக மாற்றியுள்ளதுடன், இவ்வுலகிலுள்ள அனைத்து விசுவாசிகளின் வீரத்துவ எடுத்துக்காட்டாகவும்
உள்ளார்கள் என்றார் பேராயர் Hon Tai-fai. சீன கத்தோலிக்க குருக்களும் ஆயர்களும் தவறு
செய்திருந்தால் அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவேண்டுமேயொழிய, தனிமைச் சிறைகளுக்கு
அல்ல என அரசைக் குறைகூறியுள்ளார் பேராயர் Hon Tai-fai.