தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் தரணி முழுவதும் வாழும் தமிழ் நெஞ்சங்கள்
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறுவதில் வத்திக்கான் வானொலி பெருமை
கொள்கிறது. வரப்புயர நீர் உயர்ந்து, வளம் கொழிக்கும் நெல் வளர்ந்து வாழ்வாங்கு
வாழவைக்கும் பொங்கலோ பொங்கல்.
காடு மேடு கழனியெல்லாம் நெல் விளையாட - நம்ம ஆறு
குளம் அனைத்திலுமே நீர் நிறைந்தோட இயற்கை மகள் அள்ளித் தந்த செல்வம் கண்டோமே - நல் இயலிசையில்
இறைவனுக்கு நன்றி தந்தோமே
தை மாதத் திருநாளில் பால் பொங்கலாம் - நம் கை சேர்ந்த
பலன் யாவும் அவன் தந்ததாம் யாம் கொண்ட பேரின்பம் பிறர் கொள்ளவே பால் பொங்கல் பலரோடும்
பகிர்ந்துண்ணுவோம்
ஆதவனை எண்ணியொரு அழகு பொங்கலாம் - நமக் காதரவாய் உழைத்ததற்கு
மாட்டுப் பொங்கலாம் கன்னியரும் கொண்டாடிட கன்னிப் பொங்கலாம் - இங்கு அந்நியர்கள்
யாருமில்லை அன்புப் பொங்கலாம்