2012-01-14 12:57:01

ஆசிய-பசிபிக் பகுதியில், தரமான கல்வியை வழங்குவதற்கு யூனிசெப் முயற்சி


சன.14,2012. ஆசிய-பசிபிக் பகுதியில், சிறார் பள்ளிக்குச் செல்வதற்கும், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் ஐ.நா.வின் சிறார் நிதி நிறுவனமான யூனிசெப் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம், ஆசிய-பசிபிக் பகுதியில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சுமார் 2 கோடியே 60 இலட்சம் சிறார் பலன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நேபாளம், பாப்புவா நியு கினி, பிலிப்பீன்ஸ், கிழக்குத் திமோர், வியட்நாம் போன்ற நாடுகள், யூனிசெப் நிறுவனத்தின் இந்நடவடிக்கையால் பலன் பெறும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.