மியான்மார் அரசின் போர் நிறுத்த ஒப்பந்தம், முழு ஒப்புரவுக்கானப் பாதையின் ஆரம்பம் –
அகதிப்பணி இயக்குனர்
சன.13,2012. மியான்மாரில், கடந்த அறுபது ஆண்டுகளாக இராணுவத்தோடு சண்டையிட்டு வந்த, அந்நாட்டின்
கரேன் சிறுபான்மை இனக்குழுவுடன் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது,
ஒரு நல்ல முயற்சி என்று இயேசு சபை அருள்தந்தை Bernard Hyacinth Arputhasamy கூறினார். அந்நாட்டின்
சிறுபான்மைக் குழுக்களுடன் இணக்கமுடன் வாழ்வதற்கு அரசு எடுத்துள்ள முயற்சியின் ஒரு தொடக்கமாக
இவ்வொப்பந்தம் இருக்கின்றது என்று ஆசிய-பசிபிக் பகுதிக்கான "இயேசு சபை அகதிப்பணியின்"
இயக்குனர் அருள்தந்தை அற்புதசாமி கூறினார். தாய்லாந்துக்கும் மற்றும்பிற எல்லைப்புற
நாடுகளுக்கும் செல்லும் மியான்மார் அகதிகளுக்குப் பல ஆண்டுகளாக உதவி வருகிறார் அருள்தந்தை
அற்புதசாமி.