2012-01-12 14:23:49

கவிதைக் கனவுகள் – பொங்கலோ பொங்கல்!


உழைப்பின் பலன் பொங்க
உள்ளத்துள் உவகை பொங்க
உலையில் பால் பொங்க
உதிப்பதுதான் தைப்பொங்கல்.
பொன்னு விளையற பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழா!
உழுது உழைத்த காளைக்கு
ஈரம் நிறைந்த மண்ணின்
வீரத் தாலாட்டு !

பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்
மங்குக தீமைகள் பொங்குக வளமைகள்
விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள்
நீங்குக கயமை நிலவுக வாய்மை
நல்குக வெற்றி நலிக தீதென்றும்
நிறைக நிம்மதி நீடுக ஆயுள்
நிலமே செழித்து நீர்வளம் பெருகுக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்!








All the contents on this site are copyrighted ©.