இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாச வாழ்வைத் தூண்டும் குடியேற்றதாரருக்கு
நன்றி கூறும் ஆயர் Patrick Lynch
சன.11,2012. குடியேறிவரும் விசுவாசிகளின் வருகையால், இங்கிலாந்தின் கத்தோலிக்கத் திருஅவை
பெரிதும் பயன் பெறுகிறது என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார். இஞ்ஞாயிறு கொண்டாடப்படும்
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஆயர் Patrick
Lynch, இங்கிலாந்தில் உள்ள பல பங்குச் சமுதாயங்கள் பன்னாட்டவரின் வருகையால் பயனடைந்துள்ளன
என்று கூறினார். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள கத்தோலிக்கர்கள்
இறைவார்த்தையைக் கேட்பதிலும், திருவழிபாடுகளில் கலந்து கொள்வதிலும் காட்டும் ஆர்வம்,
இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது என்று ஆயர்
Lynch சுட்டிக் காட்டினார். இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாச வாழ்வைத்
தூண்டும் குடியேற்றதாரருக்கு ஆயர் Lynch தன் நன்றியையும் இச்செய்தில் தெரிவித்துள்ளார்.