முடக்குவாத நோய்ப் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்துள்ளது
சன.10,2012. தமிழகத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது
என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தெரிவித்தார். இராஜிவ்காந்தி
அரசு பொது மருத்துவமனையில் மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு நோய்களியல் துறையின் 40வது
ஆண்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் வி.எஸ்.விஜய் இதனை அறிவித்தார். மூட்டு
நோய்களில் ஒன்றான முடக்குவாதம் வந்தால், ஒரு மனிதனை முற்றிலுமாக முடக்கிவிடும். இந்த
நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், இதற்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. மேலும், தமிழகத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது
என்று அவர் தெரிவித்தார்