இந்தியாவில் வீட்டுப் பணியாளரைப் பாதுகாப்பதற்குப் புதிய சட்டம் தேவை - அருட்சகோதரி
சன.10,2012. இந்தியாவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளரைப் பாதுகாக்கவும் அவர்களுக்குரிய
தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்யப்படவுமென புதிய சட்டத்தைக் கொண்டு வருமாறு நடுவண் அரசை
வலியுறுத்தியுள்ளார் அருட்சகோதரி ஒருவர். மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோரில் இத்திங்களன்று
நடைபெற்ற ஊர்வலத்தில் உரையாற்றிய அருட்சகோதரி Rosily Panjikaren, வீடுகளில் வேலைசெய்யும்
தொழிலாளர் பாலியல்ரீதியான கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அத்தொழிலாளர்களைப்
பாதுகாப்பதற்கு சட்டரீதியாக எந்த அமைப்பும் கிடையாது என்றும் கூறினார். இப்பணியாளர்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பேசுவதற்கு தனிப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கழகம் தேவை
என்றும் அச்சகோதரி அழைப்பு விடுத்தார். அனைத்துலக வீட்டுப்பணியாளர் தினமான இத்திங்களன்று
இடம் பெற்ற ஊர்வலத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.