பாகிஸ்தான் ஆசியா பீபியின் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்
சன.09,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு
சிறையில் உள்ள ஆசியா பீபியின் விடுதலைக்காக முயன்று வரும் அவரின் வழக்குரைஞரும் சில மனித
உரிமை நடவடிக்கையாளர்களும் கொலை மிரட்டல்களைப் பெற்றுள்ளனர். கிறிஸ்தவர்களைப் பழிவாங்குவதற்கென
தவறான முறையில் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் தேவநிந்தனைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
என குரல் கொடுத்ததற்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் மற்றும்
சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhattiயும் கொலைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியத்
தீவிரவாத குழு ஒன்று அண்மையில், ஆசியா பீபியின் உயிருக்கு விலை நிர்ணயித்திருப்பதாகவும்,
இது, அவருக்காகப் போராடுபவர்களின் மனதில் அச்சத்தை விதைத்திருப்பதாகவும் செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன. ஐந்து குழந்தைகளின் தாயான கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி, தேவ நிந்தனை
குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு ஷேக்புரா தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.