ஆயிரம் அலைகள் தாண்டுகிறேன் - என் ஆண்டவன் அன்பினில் ஊறுகிறேன் அன்பின் ஆழம் சுவைத்திடுவேன்
- இதை அனைவரும் பகிர்ந்திட அழைத்திடுவேன்
அருள்மகன் உன்கரம் தொடுகையிலே துரும்பிலும்
புதுமைகள் வெளியாகும் என் தேவன் உன்னோடு ஒன்றாகவே எந்நாளும் நான் செல்லும் பாதையெல்லாம் முள்ளாக,
கல்லாக இருந்தாலுமே பூவாக, பொன்னாக நிறைவாகுமே
பாட்டினில் அவனைப் படம் எழுதி
- உள்ள வீட்டினை அன்பாய் அலங்கரிப்பேன் அன்பாக நான் பாடும் பாடலெல்லாம் உன்பாதம்
சேர்ந்திடும் மலர்ச்சரமே என் வாழ்வு உன் அன்பை ஒளியேற்றுமே எந்நாளும் எல்லார்க்கும்
வழிகாட்டுமே