2012-01-07 14:29:01

கவிதைக் கனவுகள்... துரும்பிலும் புதுமைகள்


ஆயிரம் அலைகள் தாண்டுகிறேன் - என்
ஆண்டவன் அன்பினில் ஊறுகிறேன்
அன்பின் ஆழம் சுவைத்திடுவேன் - இதை
அனைவரும் பகிர்ந்திட அழைத்திடுவேன்

அருள்மகன் உன்கரம் தொடுகையிலே
துரும்பிலும் புதுமைகள் வெளியாகும்
என் தேவன் உன்னோடு ஒன்றாகவே
எந்நாளும் நான் செல்லும் பாதையெல்லாம்
முள்ளாக, கல்லாக இருந்தாலுமே
பூவாக, பொன்னாக நிறைவாகுமே

பாட்டினில் அவனைப் படம் எழுதி - உள்ள
வீட்டினை அன்பாய் அலங்கரிப்பேன்
அன்பாக நான் பாடும் பாடலெல்லாம்
உன்பாதம் சேர்ந்திடும் மலர்ச்சரமே
என் வாழ்வு உன் அன்பை ஒளியேற்றுமே
எந்நாளும் எல்லார்க்கும் வழிகாட்டுமே








All the contents on this site are copyrighted ©.