மனித விற்பனையைத் தடுக்கும் முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்
சன.05,2012. மனித விற்பனை, முக்கியமாக, பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் விற்பனை
இந்தியா சந்திக்கும் ஒரு பெரும் கொடுமை என்று கல்கத்தா உயர்மறைமாவட்டம் கூறியது. இந்தியத்
திருஅவை சந்தித்து வரும் இந்த பெரும் சவாலைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு கல்கத்தா
உயர்மறைமாவட்டம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும்
இந்தியாவில் ஏறத்தாழ 6 கோடி பேர் மனித விற்பனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தெரிய
வந்துள்ளது. கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமூகப்பணி மையத்தின்
வழியாக 50 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு குழுவிலும் செயல்படும் 30 இளையோர்
கிராமங்களுக்குச் சென்று மனித விற்பனைகள் நடைபெறுகின்றனவா என்று கண்காணித்து வருகின்றனர்
என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.