சன.05,2012. 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் பஞ்சாப்
மாநிலத்தில் UNICEF எனும் ஐ.நா.கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு உருவாக்கிய 35 பள்ளிகளை
அம்மாநிலத்தின் கல்வித்துறையிடம் இப்புதனன்று ஒப்படைத்தது. நெதர்லாந்து தூதரகம், மற்றும்
OPEC நிறுவனம் உட்பட பல்வேறு உலக நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவியைக் கொண்டு உருவாக்கப்பட்ட
இந்த 35 பள்ளிகளில் 4,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது. வெள்ளத்தில் அழிக்கப்பட்ட பல பள்ளிகளின் குழந்தைகளுக்கு கடந்த ஓராண்டுக்கும்
மேலாக கூடாரங்களில் அமைக்கப்பட்ட பள்ளிகளில் UNICEF பணியாளர்கள் கல்வி புகட்டி வந்தனர்
என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது. குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, நலவாழ்வு,
சுத்தமான சூழ்நிலை, தகுந்த உடல்பயிற்சிகள் மற்றும் மனநலப் பயிற்சிகள் ஆகிய அனைத்தையும்
வழங்குவதே இப்பள்ளிகளின் இலக்காக இருக்கும் என்று UNICEF அதிகாரி Karen Allen கூறினார்.