வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்
சன.04,2012. தமிழ் நாட்டின் வேலூரில் அமைந்துள்ள CMC எனப்படும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி
இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. பெரு நகரங்கள் அல்லாத பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள
மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு மருத்துவப் பணிகளை ஆற்றிவரும் மருத்துவமனை என்பதற்காகவும்,
நாட்டிலேயே இதய சிகிச்சையில் தலைசிறந்த மருத்துவமனை என்பதற்காகவும் CMCக்கு இரு விருதுகள்
வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ மனைகள் வழங்கும் பல்வேறு சேவைகள், நோயுற்றோருக்கு காட்டப்படும்
தனி கவனம் மற்றும் பாதுகாப்பு, மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள்
மற்றும் ஆய்வுகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன. சமுதாயத்தின்
மீது மிகவும் பொறுப்புள்ள வகையில் செயல்பட்ட மருத்துவ மனை என்று CMC கடந்த ஆண்டு விருது
பெற்றுள்ளது என்பதும், The Week என்ற புகழ்பெற்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
பல துறைகள் கொண்ட மருத்துவ மனைகளில் CMC இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்பதும்
குறிப்பிடத் தக்கவை.