புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம்
சன.04,2012. தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை,
கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,
கடந்த டிசம்பர் 31 மற்றும் சனவரி 1ம் தேதிகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு மதுவகைகள்
142 கோடி ரூபாய் அளவில் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து,
விற்பனையான மதுவகைகளின் மதிப்பு, 103 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு
முன், டாஸ்மாக் மதுபானங்களின் விலை ஏற்றம் பெற்றிருந்தாலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு
21 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறினார்.