2012-01-04 15:39:17

சீனாவின் பொருளாதார முன்னேற்ற மாற்றங்களால், 44,000க்கும் மேற்பட்ட கலாச்சார நினைவுச் சின்னங்கள் அழிவு


சன.04,2012. பொருளாதார முன்னேற்றம் என்ற விரைவான மாற்றங்களால், 44,000 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கலாச்சார நினைவுச் சின்னங்கள் சீனாவில் அழிக்கப்பட்டுள்ளன என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மாவோ மக்கள் குடியரசு என்ற கொள்கையின் விளைவாக ஏற்பட்ட பல முன்னேற்றங்கள், அந்நாட்டின் பல்லாயிர பாரம்பரிய சின்னங்களை அழித்து, அவைகள் இருந்த நிலங்களையும் அபகரித்து, அங்கு அடுக்கு மாடி கட்டிடங்களை உருவாக்கி வருகிறதென்று இந்த ஆய்வு கூறுகிறது.
சீனாவில் இருக்கும் 700,000 க்கும் அதிகமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட சீன கலாச்சார அரசுத் துறை வெளியிட்ட இந்த அறிக்கையில், சீனா மேற்கொண்டுள்ள விரைவான பொருளாதார மாற்றம் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழிவதற்கான முக்கிய காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த அழிவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது Shaanxi மாநிலம் என்றும், அங்குள்ள 3500க்கும் அதிகமான கலாச்சார சின்னங்கள் எவ்வித சுவடும் இன்றி அழிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.