2012-01-03 15:10:47

வன்முறைகள் களையப்பட வெனிசுவேலா கர்தினால், நாட்டு மக்களுக்கு அழைப்பு


சன.03,2012. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 623 உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ள வன்முறைகளைக் கைவிட்டு, அமைதிக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் வெனிசுவேலா கர்தினால் Jorge Urosa Savino.
ஆண்டின் இறுதி 15 நாட்களில் வெனிசுவேலா நாட்டில் வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என கவலையை வெளியிட்ட கர்தினால், அந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழவேண்டும் என்றார்.
ஒரே மாதத்தில் 623 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது என்ற கர்தினால் Urosa Savino, பாதுகாப்பற்ற உணர்வுகளை அகற்றவும் வன்முறைகளைக் களையவும் அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.







All the contents on this site are copyrighted ©.