2012-01-03 15:12:55

பிரேசில் நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்


சன.03,2012. குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிரான சட்டங்கள் பிரேசில் நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அந்நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
10 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவது அரசின் தடைகளையும் மீறி இன்னும் தொடர்வதாகக் கூறும் இந்த ஆய்வறிக்கை, பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி தொழிலாளர்களுள் 10 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் கூறுகிறது.
வீடுகளில் மற்றும் சிறு பண்ணைகளில் பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டுவது சிரமமாக உள்ளதால், குழந்தைத் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக்கூறும் இவ்வறிக்கை, 2020ம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் திட்டம் வெற்றி பெறுவதற்கு மேலும் அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்படுவதாகவும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.