என்னை வந்தடைந்த புத்தாண்டு வாழ்த்துக்களில் ஒன்று செபமாக, கவிதையாக வந்திருந்தது ஆங்கிலத்தில்.
Author Unknown எழுதியவர் யார் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கவிதை
வடிவில் வந்த அந்த செபம் இதோ: May God make your year a happy one! Not by shielding
you from all sorrow and pain, But by strengthening you to bear it as it comes;
Not by making your path easy, But by making you sturdy to travel any path;
Not by taking hardships from you, But by taking fear from your heart; Not
by granting you unbroken sunshine, But by keeping your face bright, even in the
shadows; Not by making your life always pleasant, But by showing you when
people and their causes need you most, and by making you anxious to be there to
help. God’s love, peace, hope, and joy to you for the year ahead!
Author
Unkown இறைவன் உங்கள் ஆண்டை மகிழ்வுள்ளதாக்குவாராக... இவ்வாண்டில், துன்பம்,
வேதனையில் இருந்து உங்களை அப்புறப்படுத்துவதற்கு பதில், அவைகளைத் தாங்கும் சக்தியை
உங்களுக்கு வழங்குவாராக. உங்கள் பாதையை எளிதாக்குவதற்கு பதில், எந்தப் பாதையிலும்
பயணம் செய்ய உங்களுக்கு உறுதியளிப்பாராக. கடினமானவைகளை நீக்குவதற்கு பதில், அவை
உருவாக்கும் பயங்களை நீக்குவாராக. முழு நேரமும் ஒளியில் உங்களை நிறைப்பதற்கு பதில், இருள்
சூழும் நேரங்களிலும் உங்கள் முகத்தை ஒளிபெறச் செய்வாராக. உங்கள் வாழ்வை எப்போதும்
இன்பமாக்குவதற்கு பதில், தேவையில் உள்ளவர்களை உங்களுக்கு காட்டி, அவர்களது கவலைகளைத்
தக்கத் தருணங்களில் களைய உங்களை அவர்களிடம் அனுப்புவாராக. இவ்வழிகளில் உங்கள்
ஆண்டை அன்பால், அமைதியால், நம்பிக்கையால், மகிழ்வால் இறைவன் நிரப்புவாராக.