அயர்லாந்து வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது - Dublin பேராயர்
சன.03,2012. பொது வாழ்வில் மதத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கும்போது, விசுவாசத்தை
கேலிக்கண்ணோட்டத்துடன் நோக்கும் போக்கு மாறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்தின்
Dublin பேராயர் Diarmuid Martin. அயர்லாந்து கலாச்சாரத்தின் மீது தன் பெருமளவான பாதிப்பைக்கொண்டிருந்த
திரு அவை, தற்போது அதனை இழந்து வருகின்றது என்ற பேராயர், மத பாதிப்புகள் குறித்த கருத்தரையாடல்கள்
நியாயமானவைகளே எனினும், அவை அனைத்தும் சமூகத்தில் திருஅவையின் பங்கைத் தெளிவாக உணர்ந்த
நிலையில் இடம்பெற வேண்டும் என்றார். மத நம்பிக்கைகளை சமூகத்தில் கட்டாயமாகப் புகுத்தும்
முயற்சிகள் தடைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் பேராயர் Diarmuid Martin. திருஅவையின்
தனியார்களும் திருஅவையும் அயர்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகக் கலாச்சாரத்திற்கும்
ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது என்பதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர்.