கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி வழங்க உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி
சன 02, 2011. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழக முதல்வர், எருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு
மானிய உதவி கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக, 500 பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு
இந்திய கத்தோலிக்கத் திருஅவை சார்பில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக தஞ்சை
ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களிடம் கூறினார். வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம்
பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த
தஞ்சை ஆயர், கீழ்த்திசையின் லூர்து என்ற சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி ஆலயத்தின் சிறப்பு
பற்றி எடுத்துரைத்ததோடு, கிறஸ்தவர்களுக்கு மான்ய உதவி வழங்க முன் வந்திருக்கும் தமிழக
முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்தார். இதற்கிடையே, வேளாங்கண்ணி பசிலிக்கா சார்பில்
அனைத்து மத நல்லிணக்க விழாக்கள் இலவசத் திருமணங்கள், மற்றும் எளியோருக்கு உதவிகள் இடம்பெற
உள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.