“சுனாமி விவிலியப் பிரதிகள்” பேரிடரைப் புரி்ந்து கொள்ள உதவுகின்றன
டிச.30,2011. இவ்வாண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் சேதமடையாமல் இருந்த
ஆயிரக்கணக்கான விவிலியப் பிரதிகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்று ஆசியச் செய்தி நிறுவனம்
அறிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்நோக்கிய இந்தச் சுனாமிப்
பேரிடர் பற்றிப் புரிந்து கொள்ள இப்பிரதிகள் உதவுகின்றன என்று, அவற்றை வாங்கும் மக்கள்
கூறுவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. இந்த விவிலியப் பிரதிகளை வெளியிட்ட அச்சகம்
சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இடத்தில் மூவாயிரம் விவிலியப்
பிரதிகள் மட்டும் சேதமடையாமல் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.