பெரு நாட்டில் 2012ம் ஆண்டு, “புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு
ஆண்டு”
டிச.30,2011. தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2012ம் ஆண்டை, “புதிய நற்செய்தி அறிவிப்புக்கான
ஒப்புரவு ஆண்டு” என அறிவித்துள்ளார் அந்நாட்டின் ஹூவான்காயோ உயர்மறைமாவட்ட பேராயர் Pedro
Barreto Jimeno. ஹூவான்காயோ உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 67ம் ஆண்டு கொண்டாட்டத்தின்
போது இதனை அறிவித்தார் பேராயர் Barreto Jimeno.