2011-12-27 13:36:48

டிசம்பர் 28, வாழ்ந்தவர் வழியில்... மாசற்றக் குழந்தைகள் திருநாள்


வாழ்ந்தது ஒரு சில நாட்களே ஆயினும், தங்கள் இரத்தத்தால் கிறிஸ்துவின் சாட்சிகளாய் மாறிய குழந்தைகளை எண்ணிப்பார்க்க டிசம்பர் 28ம் தேதி நல்லதொரு தருணம்.
கத்தோலிக்கத் திருச்சபை இந்நாளை மாசற்றக் குழந்தைகள் நாள் என்று சிறப்பிக்கின்றது. இக்குழந்தைகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் நிகழ்ச்சி நம்மை நிலை குலையச் செய்கிறது:
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். (மத்தேயு 2: 16)

இந்நிகழ்ச்சி நம் உள்ளங்களில் பல கேள்விகளை எழுப்புகின்றது.

குழந்தைகளுக்கு எதிராக நாம் இழைத்து வரும் பல்வேறு கொடுமைகளை நிறுத்த வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தரும் மாசற்றக் குழந்தைகளிடமிருந்து இன்று, டிசம்பர் 28ம் தேதி, சரியான பாடங்களைப் படிக்க முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.