2011-12-22 15:10:26

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களைத் தேடிச்சென்று உதவும் வியட்நாம் ஆயர்


டிச.22,2011. கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்களைத் தேடிச்சென்று உதவும் நோக்கத்தில் இந்த விழா கொண்டாப்பட வேண்டும் என்று வியட்நாம் ஆயர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
வியட்நாமின் Thanh Hòa மறைமாவட்டத்தின் ஆயர் Nguyễn Chí Linh இத்திங்கள் முதல் வெள்ளிவரை தன் மறைமாவட்டத்தின் மிகவும் வறுமைப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிறிஸ்மஸ் செய்திகளையும், பரிசுகளையும் வழங்கி வருகிறார்.
வியட்நாம் அரசு பல வழிகளிலும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகச் செயல்பட்டபோதிலும், அங்குள்ள மக்கள் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட பல வழிகளிலும் முனைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
Thanh Hòa மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் வறியோருக்கு உதவிகள் செய்யும் பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.