2011-12-21 15:39:47

தொழு நோயாளிகளின் குடியிருப்பை உல்லாசப் பயணிகளுக்கு உரிய விடுமுறைத் தலமாக மாற்ற வியட்நாம் அரசு முயற்சி


டிச.21,2011. தொழு நோயாளிகள் குடியிருப்பை வியட்நாம் அரசு ஒரு விடுமுறைத் தலமாக மாற்றும் திட்டத்தால், தொழு நோயுற்றோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரியன்னை மகளிர் என்ற கத்தோலிக்க அருள்சகோதரிகள் சபை உட்பட பல கிறிஸ்தவ சபைகள், மற்றும் அமைப்புக்கள் மூலம் 1968ம் ஆண்டிலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக உதவிகள் பெற்று வரும் Hoa Van என்ற ஒரு கிராமத்தின் நோயாளிகள் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.
தொழு நோயாளிகளின் இக்குடியிருப்பை உல்லாசப் பயணிகளுக்கு உரிய ஒரு விடுமுறைத் தலமாக மாற்ற அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், தொழு நோயாளிகளுக்கு மாற்று இல்லங்களை வழங்க அரசு உறுதி அளித்துள்ளது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
புதிய இடங்களுக்குச் செல்லும் தங்களை அங்குள்ள மக்கள் பகைமை உணர்வுடன் பார்ப்பதாகவும், தங்கள் குழந்தைகளும் பலரது கேலிகளுக்கும், வெறுப்புக்கும் ஆளாகின்றனர் என்றும் தொழு நோயாளிகள் குடியிருப்பின் தலைவர் Nguyen Van Xung கூறினார்.








All the contents on this site are copyrighted ©.